Posts

இப்படி போடு மாமா, நைஸ் மாமா என மைதானத்தில் அஷ்வினிடம் தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக் - வைரலாகும் வீடியோ

Image
தற்போது இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஒன்றில் ஆடி வருகின்றது. இந்திய அணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், தினேஷ் கார்த்திக் , முரளி விஜய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தினேஷ் கார்த்திக் மைதானத்தில் விளையாடும் போது அவ்வப்போது தமிழக வீரர்களுடன் தமிழில் பேசி விளையாடுவார். அப்படி பேசும் போது அந்த விடியோக்கள் வைரலாகும். அப்படிதான் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அதன் வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கல்லூரி சீருடையோடு மீன் விற்று குடும்பத்தை காப்பாற்றும் கேரள பெண்..

Image
கேரளா மாநிலம் அலப்புழாவை சேர்த்தவர் ஹனன் இவருடைய வயது 21. இவர் கேரளமாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில்  பி.எஸ்.சி (கெமிஸ்ட்ரி) இறுதியாண்டு படித்து வருகிறார். இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக மாலை நேரத்தில் மீன் விற்பனை செய்து தன் குடும்பத்தை காப்பாற்றிவந்துள்ளார். இவருடைய செயலை பார்த்து பாராட்டும் விதமாக கேரளாவின் பிரபல நாளிதழ் ஒன்றில் இவரது கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்த கட்டுரையை படித்தவர்களுக்கு இவர் மீது இரக்கம் ஏற்பட்டது, பிறகு இவருக்கு பலரும் உதவ முன் வந்தனர்.ஹனனின் இந்த கட்டுரையை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர்.  அதில் இந்த மாணவின் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையை பார்த்து பலர் பாராட்டி கருத்து தெரிவித்தனர்.ஆனால் சிலர் இவரை கேவலமாக கிண்டல் செய்து, பின் இது பொய் பணம் பறிப்பதிற்க்காக இவள் போடும் திட்டம் எனவும் சிலர் கருத்து தெரிவித்து பல  வதந்திகளை பரப்பியுள்ளனர்.இந்த நேரத்தில் ஹனன் மிகவும் வருத்தத்திற்கு உள்ளானார்.மேலும் இவருக்கு ஆறுதல் கூறும் விதமாக இவர் படிக்கும் கல்லூரியின் முதல்வரும், அவரது கல்லூரி நண்பர்களும் இவரது கதை உண்மை தான் என்று கூறியுள்ளனர்

இணையத்தை கலக்கும் வட சென்னை படத்தின் டீஸர் வீடியோ

Image
இணையத்தை கலக்கும் வட சென்னை படத்தின் டீஸர் வீடியோ. வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எங்களின் இணையதளத்தின் வருகைக்கு மிக்க நன்றி இங்கு அனைத்து விதமான அரசியல் செய்திகள், உலக செய்திகள், இந்திய செய்திகள், தமிழக செய்திகள், வினோதமான நிகழ்வுகள், சிசிடிவி வீடியோக்கள், சினிமா செய்திகள், சினிமா விமர்சனம்,மருத்துவம், விவசாயம், விழிப்புணர்வு பதிவுகள், சிந்தனைகள், பொழுது போக்கு வீடியோக்கள் பகிரப்படும்.உங்களின் மேலான ஆதரவை எங்களின் இணையதளத்துக்கு தருமாறு வேண்டிக்கொள்கிறோம்.

மனநலம் பாதிப்படைந்தவரை சுத்தப்படுத்தி அழகுபார்த்த காவலர்

Image
இப்போதெல்லாம் மக்கள் பலருக்கும் காவலர்கள் மீது உள்ள நம்பிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. ஆனால் காவலர் பணியை சேவையாக செய்துவரும் காவலர்களும் அதிகம் உள்ளனர். அப்படிதான் கோவை செல்லவபுரம் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிபவர்தான் பிரதீப். இவர் பேரூர் சாலையில் இருக்கும் தணிக்கை நிலையத்தில் வேலை பார்த்து வருகின்றார்.இவர் தற்போது செய்த ஒரு சேவை மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பை அவருக்கு பெற்றுதந்துள்ளது. இவர் தான் வேலை பார்க்கும் பகுதியில் பல நாட்களாக அழுக்காகவும், அதிக முடியுடன் இருந்த ஒரு மன நலம் பாதிக்கபட்ட பிச்சைக்காரரை , தன் வேலைக்கு இடைப்பட்ட நேரத்தில் அந்த நபரை சுத்தம் செய்து, தன் கையால் முடிவெட்டி, புது துணி உடுத்தி அழகுபடுத்தியுள்ளார். இது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த காவலரை அனைவரும் பாராட்டியும் வருகின்றனர். இது போன்ற காவல்துறை பணியாளர்களை ஊக்கப்படுத்த, நம் வாழ்த்துக்களை தெரிவிப்போம். மேலும் பிரதீப் அவர்கள் இந்த சேவையை மேலும், மேலும் சிறப்பாக செய்ய நாம் வாழ்த்துவோம்.

ஒரே நாளில் உலகின் அழகிய சிறுமியாக உருவான நைஜீரியாவைச் சேர்ந்த ஜாரே.

Image
நைஜிரியாவை சேர்ந்த 5 வயதான சிறுமி ஒரே நாளில் உலக அழகியாக  அங்கீகரிக்கப்பட்டு  இருக்கிறாள் . இவளது தோற்றம் மிகவும்  வசீகரமானது.  இவளுடைய கண்களோ கவிதை பாடும் கண்கள் , காண்போரை கவர்ந்திழுக்கும் கூந்தல் ,மிகவும்  மென்மையான சருமம் என அனைத்து அழகிய அம்சத்துக்கும் இந்த சிறுமி ஒரு வரம்.  மொபே பாமுயிவா என்ற புகைப்பட  கலைஞர் இந்த சிறுமியின் அழகை பார்த்து  ஆச்சாரியபட்டு பல புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து  இவள் " என்ன ஒரு அழகு !... மனிதபிறவி யில் உலவும்  ஒரு தேவதை என  பரவசபட்டுள்ளார். பிறகு இவள் ஒரு தேவதை என பெயர் சூட்டி, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார் .  தற்போது இந்த புகைப்பட கலைஞர்  இந்த சிறுமியை  புன்னகைத்தோ அல்லது சத்தமிட்டு சிரித்தோ புகைப்படம் எடுத்திருக்கலாம் , ஆனால் இவரோ நம் கண்கள் வழியாக இவளின் இயல்பான தோற்றத்தினை காணவைத்திருக்கிறேன் என அந்த புகைப்படகலைஞர் கூறியுள்ளார் . இந்த அழகிய சிறுமி ஜாரேயின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்தவர்கள் பரவசம் அடைந்து  இந்த சிறுமி உலகின் அழகிய சிறுமி என கூறியுள்ளனர்.  ஜாரே என்ற இந்த சிறுமிக்கு இரண

இனையத்தில் வைரலாகும் தமிழ்ப்படம் 2 நீக்கப்பட்ட கடைசி பாகம்

Image
இனையத்தில் வைரலாகும் தமிழ்ப்படம் 2 நீக்கப்பட்ட கடைசி பாகம். தமிழ் படத்தின் இரண்டாம் பாகம்  இந்த மாதம் ஜூலை 12 ம் நாள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் படக்குழு தாங்கள் நீக்கப்பட்ட  பகுதிகளை இணையத்தில் பதிவேற்றி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தனர். தற்போது இதன் கடைசி நீக்கப்பட்ட பகுதிகளை வெளியிட்டுள்ளனர். தற்போது அது வைரலாகி வருகின்றது. அதன் வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  எங்களின் இணையதளத்தின் வருகைக்கு மிக்க நன்றி இங்கு அனைத்து விதமான அரசியல் செய்திகள், உலக செய்திகள், இந்திய செய்திகள், தமிழக செய்திகள், வினோதமான நிகழ்வுகள், சிசிடிவி வீடியோக்கள், சினிமா செய்திகள், சினிமா விமர்சனம்,மருத்துவம், விவசாயம், விழிப்புணர்வு பதிவுகள், சிந்தனைகள், பொழுது போக்கு வீடியோக்கள் பகிரப்படும்.உங்களின் மேலான ஆதரவை எங்களின் இணையதளத்துக்கு தருமாறு வேண்டிக்கொள்கிறோம்.

கணவருக்காக மனைவி செய்ததை பாருங்கள் - கண்கலங்க வைக்கும் பதிவு!

Image
சில நாட்களுக்கு முன்பு அந்திரமாநிலத்தில் நடந்த ஒரு சோகமான நிகழ்வு அனைவரையும் வருத்தமடைய செய்துள்ளது. அந்திரமாநிலம் சித்தூரை சேர்ந்தவர் பாபு. இவர் அப்பகுதியில் கட்டிட மேஸ்திரியாக வேலைபார்த்து வந்துள்ளார். இவருக்கு சிலநாட்களாக உடல் நிலை சரியில்லாமல் போயுள்ளது. அவரை அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு மனைவி அவரை கொண்டுசேர்த்துள்ளார். ஆனால் சிகிச்சை பலன் அழிக்காமல் அவர் இறந்து விடுகின்றார். மனைவியால் கணவரை வீட்டுக்கு கொண்டுசெல்லவும் மற்றும் இறுதி சடங்கு செய்யவும் போதிய பணம் இல்லாததால், அரசு மருத்துவமனைக்கு வெளியிலேயே பிச்சை எடுத்துள்ளார். இந்த நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.